தமிழ்நாடு

tamil nadu

வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் நாளை தீர்ப்பு!

வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

By

Published : May 23, 2022, 7:06 PM IST

Published : May 23, 2022, 7:06 PM IST

Gyanvapi Mosque
Gyanvapi Mosque

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தில் ஞானவாபி மசூதியின் வெளிப்புறச்சுவரில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை தினமும் வழிபட அனுமதிகோரி, இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை வீடியோவாகப் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த கள ஆய்வில், மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே கள ஆய்வு நடத்த அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கை நீதித்துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும், மசூதியில் சிவலிங்கம் உள்ளதாக கூறப்படும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு நீடிப்பதாகவும், கள ஆய்வு தொடர்பாக தகவல்கள் கசிவதைத் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட நீதிபதி விஷ்வேஷா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கள ஆய்வு தொடர்பான அறிக்கை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆய்வுக்குழு தாக்கல் செய்த அறிக்கையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் நாளை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.

இதையும் படிங்க:சிவலிங்கம் குறித்து கருத்து தெரிவித்த வழக்கு - பேராசிரியருக்கு நிபந்தனை ஜாமீன்

ABOUT THE AUTHOR

...view details