புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்கும் போராட்டம் நடைபெற்றது.
அதில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக படித்த இளைஞர்களுக்கு வேலை ஏதும் வழங்கவில்லை, வேலை வாய்ப்பகத்தில் பதிந்த இளைஞர்களை காங்கிரஸ் அரசு காத்திருக்கும் சூழ்நிலையில் உருவாக்கியுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டது.
முன்னதாக புதுச்சேரி மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் மகளிர் அரசு மருத்துவமனை அருகே புறப்பட்டு, நகரின் முக்கிய வீதி வழியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட வந்தடைந்தது.