தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியில் உள்ள பழைய நூலகத்தை 'புத்தக அலமாரி' போன்ற தோற்றத்தில் புதுப்பித்து பெருநகர மாநகராட்சி அசத்தியுள்ளது.
அந்த நூலகத்தின் கட்டடம், புத்தக அலமாரி அருகில் பெண் ஒருவர் புத்தகத்தை ஆர்வமாக வாசிப்பது போன்று உள்ளது. அதேபோல் உட்புற சுவர்களும் தனித்துவமான ஓவியங்களால் ரசிக்கும்படியாக வரையப்பட்டுள்ளது. ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த நூலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.