ஹைதாராபாத்: தெலங்கானா மாநிலத்தில் சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
கடந்த ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவின்போது சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராம் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் காலில் விழுந்துள்ளார்.
அவரின் இந்த செயல் வீடியோவாக இணையத்தில் வைரலானது. மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் காலில் விழுவதா என சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்னர்.