புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமைச்சர்கள் பங்கீடு குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டு இன்று (ஜூன்.23) காலை முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தமிழிசையை சந்தித்து அமைச்சரவை பட்டியல்களை வழங்கினார்.
இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது, “புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்துவதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. தடுப்பூசியை ஊக்கப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றது. மிகப்பெரிய ஜவுளி நிறுவனம் தடுப்பூசி செலுத்திகொண்டால் 10 விழுக்காடு தள்ளுபடி என்று அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.