தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 6, 2021, 6:52 PM IST

Updated : Mar 6, 2021, 7:24 PM IST

ETV Bharat / bharat

'இத தான் அவங்க கண்டுபிடிச்சாங்க?' - ஐடி ரெய்டு குறித்து டாப்சி கிண்டல்

டெல்லி: நடிகை டாப்ஸிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் தற்போது மெளனம் கலைத்துள்ளார்.

டாப்சி
டாப்சி

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து மூன்று நாள்கள் சோதனை நடத்தினர். விவசாயிகள் விவகாரத்தில் ஒட்டு மொத்த பாலிவுட் துறையும் மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்த நிலையில், இவர்கள் இருவரும் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தனர்.

இதன் காரணமாகவே, அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோரின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், ஐடி ரெய்டு குறித்து டாப்சி கிண்டல் அடித்து ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், "மூன்று நாள்கள் தீவிரமாக நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.

பாரிசில் நான் வாங்கியதாகக் கூறப்படும் பங்களாவின் சாவி. ஏனெனில், கோடை காலம் வருகிறது அல்லவா? எதிர்காலத்தில் என்னை சிக்க வைப்பதற்காக நான் முன்னதாக வேண்டாம் என மறுத்திருந்த 5 கோடி ரூபாய்க்கான ரசீது. மதிப்பிற்குரிய நிதியமைச்சர் சொன்னதுபோல் 2013ஆம் ஆண்டு என்னிடம் நடத்தப்பட்ட சோதனையின் நினைவுகள். பின்குறிப்பு: நான் அவ்வளவு மலிவானவள் அல்ல" என பதிவிட்டுள்ளார்.

Last Updated : Mar 6, 2021, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details