தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2022, 11:45 AM IST

Updated : Dec 19, 2022, 12:08 PM IST

ETV Bharat / bharat

டெல்லியில் சாலையோரம் கிடந்த மர்மபொருளால் பரபரப்பு

டெல்லியின் பஸ்சிம் விஹாரில் கிடந்த மர்மபொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் சாலையோரம் கிடந்த மர்மபொருளால் பரபரப்பு
டெல்லியில் சாலையோரம் கிடந்த மர்மபொருளால் பரபரப்பு

டெல்லியின் பஸ்சிம் விஹாரில் சாலையோரம் இன்று (டிசம்பர் 19) மர்மபொருள் ஒன்று கிடப்பதை மக்கள் பார்த்துள்ளனர். வெடிகுண்டுபோல தெரிந்ததால் போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில், டெல்லி போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடந் சம்பவ இடத்துக்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே அந்த பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சோதனையில் அந்த மர்மபொருள் வெடிகுண்டு அல்ல என்பதும் பழுதடைந்த வைஃபை ரூட்டர் அல்லது டிஜிட்டல் பூட்டாகும் என்பது தெரியவந்தது. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர். இருப்பினும் பல மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதிக நேரம் போன் பேசியதற்காக மகளை கொன்ற தந்தை

Last Updated : Dec 19, 2022, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details