தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 3:22 PM IST

ETV Bharat / bharat

சந்திரபாபு நாயுடு பைபர் நெட் ஊழல் வழக்கு! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Chandrababu Naidu FiberNet scam case : முன்னாள் ஆந்திர பிரதேச முதலமைச்சர் மீதான பைபர் நெட் ஊழல் வழக்கில் விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Chandrababu Naidu
Chandrababu Naidu

டெல்லி : பைபர் நெட் ஊழல் வழக்கில் ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கி உள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது பைபர் நெட் டெண்டர் விடுவிதில் 330 கோடி ரூபாய் உழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், பைபர் நெட் ஊழல் விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி ஆந்திர பிரதேச போலீசார் நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளனர். இதனிடையே, பைபர் நெட் ஊழல் வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பெல்லா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு விசாரணையில் உள்ள நிலையில், பைபர் நெட் ஊழல் வழக்கு தொடர்பாகவும் விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதேநேரம் சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, பைபர் நெட் ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்தை நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய கூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும், மனு மீதான விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். திறன் மேம்பாட்டு வழக்கில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.

பைபர்நெட் ஊழல் வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நாயுடு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

இதையும் படிங்க :Gaganyaan: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் முதல்படி! சாதிக்குமா இஸ்ரோ?

ABOUT THE AUTHOR

...view details