பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அறுவை சிகிச்சைக்கு தாமதமானதால் மருத்துவர் ஒருவர் தனது காரில் இருந்து இறங்கி, 3 கிலோமீட்டர் தூரம் ஓடி மருத்துவமனைக்கு சென்றார். இச்சம்பவம் சென்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி நடந்தது. தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கோவிந்த் நந்தகுமார், லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்வதற்காக சர்ஜாபூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மருத்துவமனை அருகே நெருங்கும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். தாமதமானதால் கூகுள் மேப்பில் சரிபார்த்த போது மருத்துவமனைக்கு செல்ல 45 நிமிடங்கள் ஆகும் என்று காட்டியதால் மருத்துவமனைக்கு ஓடி சென்றார்.