நாளந்தா: பிகார் மாநிலம் நாளந்தாவின் சிலாவ் பகுதியில் உள்ள கோயில் விநாயகர் சிலை ஒரு ஆண்டில் 355 நாட்கள் காவல் நிலைய வளாகத்திலும், 10 நாட்கள் கோயிலிலும் வைக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் 355 நாள்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்து விநாயகர் சதுர்த்திக்காக மீண்டும் கோயிலில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை போலீஸ் பாதுகாப்பில் வைக்க வேண்டிய காரணம குறித்து அந்த கோயிலின் பூசாரி பால் கோவிந்த் ராம் கூறுகையில், " இந்த விநாயகர் சிலை விலைமதிப்பற்ற பளிங்கு கற்களால் செய்யப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையானது. இதுபோல் வேறெங்கும் கிடையாது. ஒருமுறை இந்த சிலை திருடப்பட்டது.