கிரிதி: ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி நகரைச் சேர்ந்த சுனில் சோரன் என்பவரது முதல் மனைவி ஷைலீன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் நான்கு மகன்கள் இருந்தனர். இதனிடையே சுனில் சோரன், கடந்த ஏப்ரல் மாதம் சுனிதா ஹன்ஸ்தா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சுனிதாவுக்கு, ஷைலீனின் மகன்களைப் பிடிக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று(நவ.24) கோழிக்கறி குழம்பு வைத்த சுனிதா, அதில் விஷம் கலந்து வளர்ப்பு மகன்கள் மூவருக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அதில், அனில் (3), சங்கர் (8) இருவரும் உணவை சாப்பிட்ட நிலையில், விஜய் (12) சாப்பிடவில்லை என தெரிகிறது. விஷம் கலந்த உணவை சாப்பிட்ட இருவரும் வாயில் நுரை தள்ளி கீழே விழுந்தனர். இதைக் கண்டு அச்சமடைந்த சுனிதா அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.