தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசா டாடா ஸ்டீல் ஆலையில் விபத்து - 19 தொழிலாளர்கள் படுகாயம்! - நீராவிக்குழாய் வெடித்து விபத்து

ஒடிசாவில் டாடா ஸ்டீல் தொழிற்சாலையில் நீராவிக்குழாய் வெடித்த விபத்தில், 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

steam leaks
ஒடிசா

By

Published : Jun 13, 2023, 9:40 PM IST

Updated : Jun 13, 2023, 9:52 PM IST

ஒடிசா: தேன்கனல் மாவட்டத்தில் மிராமண்டலி என்ற இடத்தில் டாடா ஸ்டீல் உருக்காலை இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் 300 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையத்தில், இன்று (ஜூன் 13) பிற்பகலில் திடீரென நீராவிக்குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால், குழாயிலிருந்து உயர்வெப்பநிலை கொண்ட நீராவி வெளியேறியது. இதில், ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் பலரும் காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், காயமடைந்த ஊழியர்களை மீட்டு, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நீராவிக் கசிவால் 19 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக டாடா ஸ்டீல் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து டாடா ஸ்டீல் உருக்காலை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிசாவின் தேன்கனலில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில், மின் உற்பத்தி நிலையத்தில் நீராவிக் கசிவால் ஏற்பட்ட விபத்து குறித்து நாங்கள் வருத்தமடைகிறோம். இன்று மதியம் 1 மணியளவில் ஆய்வுப் பணியின் போது இந்த விபத்து நடந்தது. இதில் சில ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆலை வளாகத்தில் உள்ள தொழில்சார் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கிற்கு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நிர்வாகம் தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. அதேபோல், அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். தொழிலாளர்களின் பாதுகாப்பே எங்களது முன்னுரிமை. இந்த சம்பவத்திலிருந்து பாடம் கற்க கடமைப்பட்டுள்ளோம். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் கிடைத்தால் உடனடியாக தெரிவிப்போம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, ஒடிசாவில் கடந்த வாரம் நடந்த ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில் தடம் புரண்ட சம்பவங்களும் நடந்தன.

இதையும் படிங்க: Pakistani drone: எல்லைப்பகுதியில் பாக்., ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை!

Last Updated : Jun 13, 2023, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details