நமீபியா: இந்தியாவில் அழிந்துபோன பாலூட்டி இனமான சிவிங்கிப்புலி வகை சிறுத்தைகளை, 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக, நமீபியா நாட்டிலிருந்து 8 சிவிங்கிப்புலிகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஐந்து ஆண் சிவிங்கப்புலிகள் மற்றும் மூன்று பெண் சிவிங்கப்புலிகள் கொண்டுவரப்படவுள்ளன. இவை வரும் 17ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய விலங்கியல் பூங்காவில் திறந்துவிடப்படவுள்ளது.
இந்த நிலையில், சிவிங்கப்புலிகளை கொண்டு வருவதற்காக B747 ஜம்மோ ஜெட் விமானம் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் நமீபியா சென்றடைந்தது. இந்த விமானத்தின் முகப்பில் புலியின் உருவத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.