தமிழ்நாடு

tamil nadu

ஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை சுட்டுக்கொலை

By

Published : Nov 10, 2021, 7:47 PM IST

மல்யுத்த வீராங்கனை நிஷா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை சுட்டுக்கொலை
ஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை சுட்டுக்கொலை

ஹரியானா மாநிலம் சோனிப்பேட்டைச் சேர்ந்த நிஷா என்ற மல்யுத்த வீராங்கனை அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

நிஷா தனது தாயார் தன்பதி, சகோதரர் சூரஜ் ஆகியோருடன் இருந்தபோது இந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் நிஷா அவரது சகோதரர் சூரஜ், இருவரும் சம்பவயிடத்தில் உயிரிழந்தனர். தாயார் தன்பதி ரோத்தக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக சோனிப்பேட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிஷா பெயரால் குழப்பம்

இந்நிலையில், மறைந்த நிஷாவுக்குப் பதிலாக, பிரதமரிடம் பாராட்டுப் பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வேறொரு தேசிய வீராங்கனை நிஷாவின் புகைப்படத்தை பயன்படுத்தி அவர் தான் கொலை செய்யப்பட்டார் என செய்திகள் பரவத்தொடங்கின.

இதையடுத்து தான் இறக்கவில்லை, உயிருடன்தான் இருக்கிறேன் எனக் குழப்பத்தில் சிக்கிய நிஷா மறுப்பு தெரிவித்து காணொலி வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:VIRAL VIDEO: ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஜவுளிக்கடைக்குள் புகுந்த நபர்!

ABOUT THE AUTHOR

...view details