சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்போது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் பாஜக மூத்த தலைவர்களான அருண் ஜேட்லியும், சுஷ்மா சுவராஜும், மனம் நொந்து இறந்ததாக கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியது. சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் குறித்த எனது கருத்து, ஊடகத்தின் மூலம் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், தாராபுரத்தில் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.