தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2021, 4:18 PM IST

Updated : Nov 9, 2021, 5:43 PM IST

ETV Bharat / bharat

பத்மஸ்ரீ விருது பெற்றார் சாலமன் பாப்பையா!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருதை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.

பத்ம ஸ்ரீ
பத்ம ஸ்ரீ

டெல்லி:குடியரசுத் தலைவர் மாளிகையில் 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று (நவ.9) நடைபெற்றது. இந்தாண்டு 119 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் ஆற்றிய சேவையைப் பாராட்டி பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.

கூடைப்பந்து வீராங்கனை பி. அனிதாவுக்கு பத்மஸ்ரீ விருது

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பி. அனிதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்தாண்டு 7 பேர் பத்ம விபூஷண், 10 பேர் பத்ம பூஷண், 102 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர். மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை, அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக்கொண்டார்.

பாடகி சித்ராவிற்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது.

பத்மஸ்ரீ விருது

கீழ்கண்டவர்கள் தமிழ்நாட்டிலிருந்து 2021ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.

  • சுப்பு ஆறுமுகம் (கலை)
  • பாப்பம்மாள் (விவசாயம்)
  • பாம்பே ஜெயஸ்ரீ (கலை)
  • கே.சி. சிவசங்கர் (கலை)
  • மராச்சி சுப்பு ராமன் (சமூகப் பணி)
  • சுப்பிரமணியன் (சமூகப் பணி)
  • ஸ்ரீதர் வேம்பு (வர்த்தகம் மற்றும் தொழில்)

இதையும் படிங்க: தடுப்பூசி போடவில்லை என்றால் சம்பளம் இல்லை - மாநகராட்சி நிர்வாகம் கெடுபிடி

Last Updated : Nov 9, 2021, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details