கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துவருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இது மகாராஷ்டிர மாநிலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவமனையில் பலர் இறந்துவருகின்றனர்.