ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக ஆறு சிறுமிகள் இருப்பதாக ரயில்வே பாதுகாப்புப் படையிருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் 6 சிறுமிகளை மீட்டனர்.
முதல்கட்ட விசாரணையில், சிறுமிகள் வீட்டு வேலைகளுக்காக டெல்லிக்கு அனுப்பப்படவிருந்தனர். அவர்களுடன் பாதுகாவலர் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.