தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 19, 2022, 4:58 PM IST

ETV Bharat / bharat

கார்-பஸ் மோதி கோர விபத்து : 6 பேர் உயிரிழப்பு

கார் மீது பேருந்து மோதிய கோர விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

six-killed
six-killed

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம், தாரியாவில், கெளரி பஜார்- ருத்ராபூர் சாலையில் நேற்றிரவு(18-4-2022) கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்கள் ஷூபம் குப்தா, ராம் பிரகாஷ் சிங், வஷிஷ்ட் சிங், ஜோகன் சிங், அங்குர் பாண்டே, தேவ் தத் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், கோயிலுக்குச்சென்று காரில் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீபதி மிஸ்ரா தெரிவித்தார்.

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'வெற்றிலை பாக்கும் சவைக்க சவைக்க' - பிடித்தவரிடம் வெற்றிலையை பெற்று கணவரைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details