தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாடகர் கைலாஷ் கேர் மீது தண்ணீர் பாட்டிலை வீசி தாக்குதல் - இருவர் கைது! - ஹம்பி உற்சவம்

கர்நாடகாவில் இசை நிகழ்ச்சியில் பாடகர் கைலாஷ் கேர் மீது தண்ணீர் பாட்டிலை வீசி தாக்குதல் நடத்திய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாடகர்
பாடகர்

By

Published : Jan 30, 2023, 2:21 PM IST

ஹம்பி: கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாரம்பரியமிக்க ஹம்பி நகரில் கடந்த 27ஆம் தேதி "ஹம்பி உற்சவம்" என்ற கலை, கலாச்சார திருவிழா தொடங்கியது. மாநில சுற்றுலாத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் இறுதிநாளான நேற்று(ஜன.29) இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், பத்மஶ்ரீ விருதுபெற்ற பாடகர் கைலாஷ் கேர் பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது இசை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தண்ணீர் பாட்டிலை எடுத்து பாடகர் கைலாஷ் மீது வீசினர். பாடகர் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் பாதுகாப்பு பணியிலிருந்து போலீசார் உடனடியாக அங்கு சென்று இரண்டு இளைஞர்களையும் வெளியேற்றி, பிறகு கைது செய்தனர். இந்த தாக்குதலால் பாடகர் கைலாஷுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. பாடகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெங்களுருவில் ஜி20 ஆற்றல் மாற்ற பணிக்குழு கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details