தமிழ்நாடு

tamil nadu

சிவசேனா அடிமையைப் போல் நடத்தப்பட்டது - சஞ்சய் ராவத்

By

Published : Jun 13, 2021, 4:51 PM IST

மகாராஷ்டிராவின் முந்தைய ஆட்சியில் சிவசேனா அடிமை போல் நடத்தப்பட்டதாகவும், கட்சியை அழிக்க கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Shiv Sena was treated as slaves in erstwhile BJP govt in Maharashtra: Sanjay Raut
சிவசேனா அடிமையைப் போல் நடத்தப்பட்டது - சஞ்சய் ராவத்

மும்பை:வட மகாராஷ்டிராவிலுள்ள ஜால்கோன் பகுதியில் சிவசேனா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய சஞ்சய் ராவத் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை டெல்லியில் தனியாக சந்தித்த மறுநாள் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருக்கவேண்டும் என எப்போதும் நினைப்பேன் எனக் குறிப்பிட்ட ராவத், எதையும் பெறமுடியவில்லை என்றாலும், தற்போது முதலமைச்சராக சிவ சேனாவினர் உள்ளனர் என்பதை பெருமையாக கூறலாம் என்றார்.

மேலும், 2019ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பின்பு நடந்த நிகழ்வுகளையும், அந்தக் கூட்டத்தில் நினைவுபடுத்தி, எதுவேண்டுமானாலும் நடக்கலாம், சரத் பவார் உத்தவ் தாக்கரேவுக்கு தோளோடு தோள் நிற்கிறார் எனவும் அவர் பேசியுள்ளார்.

முதலமைச்சர் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையேயான கூட்டணி 2019ஆம் ஆண்டு நொறுங்கியது. அதன்பின்னர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு சிவசேனா ஆட்சியில் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'மோடிட்ட பேச போறன்' மீண்டும் பாஜக - சிவசேனா கூட்டணி - ராம்தாஸ் அத்வாலே

ABOUT THE AUTHOR

...view details