இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி அனைத்து மாநில அரசுகளுடனும் கோவிட்-19 நிலைமை குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கரோனா: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க சிவசேனா வலியுறுத்தல் - கோவிட்-19
மும்பை: கோவிட்-19 நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் கரோனா நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
![கரோனா: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க சிவசேனா வலியுறுத்தல் Shiv Sena demands special Parliament session to discuss COVID situation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11458807-thumbnail-3x2-brd.jpg)
Shiv Sena demands special Parliament session to discuss COVID situation
மேலும், "நான் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுடன் இது குறித்து பேசிவருவதால் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வலியுறுத்துகிறேன். அவர்கள் தங்களது மாநிலங்களில் கோவிட்-19 நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர்.
அதனால், அரசு சிறப்புக் கூட்டத்தொடருக்கு அழைப்புவிடுத்தால் அங்கு அனைத்து மாநிலங்களின் கரோனா நிலைமை குறித்து வெளிப்படையாக விவாதிக்கலாம்" என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.