உத்ரகண்ட் மாநிலத்தில் உள்ள சம்பவத் மாவட்டத்தில் நேற்று இரவு பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தனக்பூர் பஞ்சமுகி தரம்சாலாவில் உள்ள கக்கானாய் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மண் சிங். இவரின் மகன் மனோஜ் சிங். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்களின் உறவினர்கள் காரில் சென்றனர். உறவினர் அனைவரும் திருமணத்தில் கலந்துகொண்டு அதே வாகத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.