டெல்லி: 2019ஆம் ஆண்டின் இறுதியில் புதிய வகை கரோனா வைரஸான கோவிட் பெருந்தொற்று பாதிப்பு அறியப்பட்டது. முதன்முதலில் சீனாவின் வூகான் நகரில் இந்த பெருந்தொற்று பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர்.
அதன்பின்னர் இந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்நிலையில் கடந்தாண்டு முதல் அலை தாக்கியது. இதில் பல்வேறு மக்கள் உயிரிழந்தனர்.
தொடர்ந்து இரண்டாவது அலையிலும் உயிரிழப்பு அதிகரித்துகொண்டே வருகிறது. தற்போது அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பதில் மத்திய- மாநில அரசுகள் முழுவீச்சில் வேகம் காட்டிவருகின்றன.