மும்பை: டிஆர்பி (தொலைக்காட்சி மதிப்பீடு புள்ளி) மோசடி தொடர்பாகக் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் விநியோகத் தலைவர் கன்ஷ்யம் சிங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார் என்று மும்பை குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெற்றுள்ள செல்வாக்கை அளவிடத் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகளை (Television Rating Points) கணக்கிடப்படுகிறது.பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமானால் அந்தப் புள்ளிகள் அதிகமாகும். புள்ளிகள் அதிகமானால் விளம்பரங்கள் அதிகமாக ஈர்க்கப்படும்.
இதன் மூலம் ஊடகத்தின் அதிக வருவாய் உயரும். எனவேதான் இவ்வரிசையில் அதிகமான புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற போட்டியில் ஒவ்வொரு தனியார் சேனலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு வகையில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, அதனைக் கண்காணிக்கும் பணியில் ஒலிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (பி.ஏ.ஆர்.சி) இறங்கியது.