தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு முன்பிணை! - லட்சத்தீவு

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா பட்டேலை விமர்சித்ததால் தேசத்துரோக வழக்கை எதிர்கொள்ளும் நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்பிணை (Anticipatory bail) வழங்கியது.

Aisha Sultana
Aisha Sultana

By

Published : Jun 25, 2021, 3:53 PM IST

எர்ணாக்குளம் : தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்பிணை வழங்கியது.

லட்சத்தீவின் புதிய நிர்வாகியான பிரபுல் கோடா பட்டேல், தீவு மக்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இது குறித்து கருத்து பதிவிட்ட நடிகை ஆயிஷா சுல்தானா, “பிரபுல் பட்டேலை உயிரி ஆயுதம் (bio-weapon) என வர்ணித்தார்.

இதையடுத்து சுல்தானா மீது காவரட்டி காவல் நிலையத்தில் தேசத்துரோக பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைதிலிருந்து தப்பிக்கும் வகையில் முன்பிணை கோரி சுல்தானா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதில் லட்சத்தீவு நிர்வாகம் மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு முன்பிணை வழங்கினர்.

மேலும், இது தொடர்பாக விசாரணைக்கும் காவல்நிலையத்தில் நடிகை ஆயிஷா சுல்தானா ஆஜராக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு முன்பிணை வழங்க மத்திய- லட்சத்தீவு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரவித்தனர்.

இதையும் படிங்க : கொச்சி வழியாக லட்சத்தீவு செல்லும் திட்டத்தை கைவிட்ட பிரஃபுல் படேல்

ABOUT THE AUTHOR

...view details