மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில் "எழுபது விழுக்காடு சுகாதார சேவை, தனியார் வசம் உள்ளது. இதுதொடர்பாக சரியான சிகிச்சை நெறிமுறைகள், சுகாதார நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை தாக்கல் செய்த ஜன் ஸ்வத்ய அபியான் அமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரிக், அரசுக்கு இதுகுறித்து பதிலளிக்கக் கோரியும் அரசு எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்றார்.
மேலும் "தேசிய மனித உரிமைகள் ஆணையமும், சுகாதார அமைச்சகமும் நோயாளிகளின் உரிமைகள் குறித்த வரைவு சாசனத்தை வகுத்துள்ளன. ஆனால் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை" என்றார்.