டெல்லி:தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகரும் அவரது மனைவியும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அந்த சிறையில் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் டெல்லிக்கு உள்ளே இருக்கும் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் சுகேஷ் சந்திரசேகரும் அவரது மனைவியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் டெல்லி மண்டோலி சிறைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மண்டோலி சிறையில் இருந்து டெல்லி சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத வேறு சிறைக்கு மாற்றக்கோரி சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் சிறையில் தாக்கப்பட்டதாக கூறி, அதுதொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.