இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்பான பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இன்று(ஏப்.27) விசாரணைக்கு வந்த வழக்கை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா பதிலளிக்கையில், மத்திய அரசு நிர்வாக ரீதியாக அனைத்து துறையையும் முடுக்கிவிட்டு வேலைசெய்துவருகிறது. அதன் விவரங்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் பிரமதருக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கப்படுகிறது என்றார்.