இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய அவர், “ மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநில அரசுகள் மீது மத்திய அரசு தொடர்ந்து அழுத்தங்கள் தந்துகொண்டே இருக்கின்றது. எங்களின் மாநில உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அதற்காக அரசியல் அழுத்தங்கள் தொடருமானால், அதனை நாங்கள் மனதார வரவேற்கிறோம். எங்கள் மீதான மத்திய அரசின் பழிவாங்கல் அரசியல் தொடர்கிறது. அதனைத் துணிந்து எதிர்கொள்வோம்.
இத்தகைய தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மத்திய அரசு அழுத்தம் அரசியலைச் செய்ய முயற்சிக்கிறது, ஆனால் அது மகாராஷ்டிராவில் பெரிதும் பாதிக்காது, மத்திய நிறுவனங்களின் நகர்வுகளை நாங்கள் அமைதியாக கவனித்துவருகிறோம். நாங்கள் மிரட்டப்படுவதில்லை.
மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தின் மீது எப்போதும் அழுத்தம் அரசியல் இருக்கும். நாங்கள் தொடர்ந்து போராடுவோம். யாராவது அழுத்தம் அரசியல் செய்ய விரும்பினால், நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். எங்களுக்கு எங்கள் மாநில மக்களின் நலனே முதன்மையான விஷயம். அதற்காக வெளிப்படையான அரசியல் செய்ய விரும்புகிறோம்.
ஆனால், மத்திய அரசோ அமலாக்க இயக்குநரகம் (இ.டி), சிபிஐ போன்ற விசாரணை முகமைகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது. அரசியல் சாசனத்திற்கு எதிராகச் செயல்படவைக்கிறது. மத்திய அரசின் விசாரணை நிறுவனங்களைப் பயன்படுத்தி எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது.