ராய்ப்பூர்: காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் அபராதம் ரூ.100இல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,419 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 113 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெருந்தொற்று நோய் திருத்தச் சட்டத்தின் விதிகள் மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முகக்கவசம் அணியாமல் பயணிப்போரிடம் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும். இந்தத் அபராதத் தொகை, முன்னர் ரூ.100 ஆக இருந்தது. மேலும் மாநிலத்தின் ராய்ப்பூர், துர்க், பஸ்தர், ராய்கார்க் உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.