தமிழ்நாடு

tamil nadu

சாலையோரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு

By

Published : Nov 21, 2021, 9:14 AM IST

காரைக்கால் அருகே சாலையோரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை மீட்பு
குழந்தை மீட்பு

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் இளையான்குடி செல்லும் சாலையோரத்தில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர் துணி மற்றும் பாலீதின் பைகளால் சுற்றி சாலையோரத்தில் தூக்கி வீசி சென்றுள்ளனர்.

பின்னர் அந்த வழியாக சென்ற சுரக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் குழந்தையை மீட்டு திருநள்ளார் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பச்சிளம் குழந்தை மீட்பு

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கறுப்பாக இருப்பதாகக் கூறி மனைவிக்கு ’முத்தலாக்’ : கணவர் மீது வழக்குப் பதிவு

ABOUT THE AUTHOR

...view details