தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கனமழையால் பழுதடைந்த சாலைகள்: துணை நிலை ஆளுநர் ஆய்வு

புதுச்சேரி: கனமழையால் பழுதடைந்த சாலைகளை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.

By

Published : Jan 24, 2021, 11:10 AM IST

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை, புயல்கள் காரணமாக பெய்த கனமழையால் சாலைகள் பழுதடைந்துள்ளன. இதனை சரிசெய்யக் கோரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் ஆலோசனை செய்தார்.

தொடர்ந்து சாலைகளை சீரமைக்கும் முன் தற்காலிகமாக பள்ளங்களை நிரப்புமாறு அலுவலர்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவை கேட்போம் - முதலமைச்சர் நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details