தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புத்தாண்டு முதல் மீண்டும் இயக்கப்பட உள்ள ’வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’

கோவிட்-19 முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ’வந்தே பாரத் எக்ஸ்பிரெஸ்’ நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

By

Published : Dec 31, 2020, 1:08 PM IST

Vande Bharat Express
Vande Bharat Express

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன விரைவு ரயிலான ’வந்தே பாரத் எக்ஸ்பிரெஸ்’, 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் முதன்முதலாக இயக்கப்பட்டது. பின்னர் பல வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பெரஸ் இயக்கப்பட்ட நிலையில், புதுடெல்லி-காத்ரா வழித்தடத்திற்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீரின் வைஷ்னோ தேவி கோயில் யாத்திரைக்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது.

கோவிட்-19 காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்த சேவை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், பக்தர்கள், யாத்திரிகர்களின் பயன்பாட்டிற்காக 2021, ஜனவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் சேவை தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் ஆயிரத்து 786 ரயில்கள் இயக்கப்பட்டுவருதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வணிகம் 2020 : ஒரு பார்வை

ABOUT THE AUTHOR

...view details