இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையில் முன்னிலை வகித்து வருகின்றன. கடந்த வாரம் ஏர்டெல் நிறுவனம் தனது வழக்கமான ரீசார்ஜ் ப்ளான்களின் விலையை(Airtel New Tariffs) 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது.
குறைந்த பட்ச ரீசார்ஜ் விலை ரூ. 79 ஆக இருந்த நிலையில், அது தற்போது ரூ.99ஆக உயர்ந்துள்ளது. அன்லிமிடட் கால் மற்றும் தினசரி 1GB டேட்டா கொண்ட 28 நாட்களுக்கான ரீசார்ஜ், முதலில் ரூ.219 இருந்த நிலையில், தற்போது ரூ.265 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் அனைத்து ப்ளான்களின் விலைகளும் உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏர்டெலைத் தொடர்ந்து வோடஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியது. அதன்படி ரூ.79 என்று இருந்த திட்டம் உயர்ந்து ரூ.99 ஆகவும், ரூ.149 என்று இருந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.179 ஆகவும் உயர்ந்தன.