திருவனந்தபுரம்: கேரளத்தின் பாலா சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ மாணி சி காப்பன். இவர், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் இணைந்தார்.
அவரை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா வரவேற்றார். இந்நிலையில், மாணி சி காப்பன் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்கட்சிக்கு பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.