இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து பூஞ்சை தொற்று பாதிப்பும் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது. மியூகோர்மைகோஸிஸ் (mucormycosis) எனப்படும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளை, பச்சை பூஞ்சை பாதிப்புகள்
இதே போன்று மஞ்சள் பூஞ்சை தொற்று பரவியதாக கடந்த சில நாள்களாக செய்திகள் வெளியான நிலையில், தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம், வதோதரா, மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் ஆகிய பகுதிகளில் வெள்ளைப் பூஞ்சை, பச்சை பூஞ்சை பாதிப்புகள் பரவத் தொடங்கியுள்ளன.