ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் வாரந்தோறும் சனிக்கிழமை, 'நோ பேக் டே' என்ற புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்களின் படிப்பு சுமையை குறைக்கும் வகையிலும், விளையாட ஊக்குவிக்கும் வகையிலும் இந்த புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையில், மாணவர்கள் செஸ் விளையாட ஊக்குவிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.டி.கல்லா அறிவித்தார். பிகனேரில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை அறிவித்தார். அப்போது பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து சதுரங்க விளையாட்டையும் விளையாடினார்.
அப்போது பேசிய அவர், "நவம்பர் 19ஆம் தேதி முதல் ராஜஸ்தானில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் ஒரே நேரத்தில் தொடங்கப்படும். இது ஒரு வரலாற்று நடவடிக்கை. இது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உதவும். ராஜீவ் காந்தி கிராமப்புற ஒலிம்பிக் போட்டியில் கிராமப்புறங்களில் இருந்து 30 லட்சம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகள் நகர்ப்புறங்களிலும் நடத்தப்படும்.