தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு: சிக்கியிருக்கும் 400 பேர் - Maharashtra

மும்பை: ராய்கட் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 300லிருந்து 400 பேர்வரை சிக்கியிருக்கின்றனர்.

நிலச்சரிவு
நிலச்சரிவு

By

Published : Jul 22, 2021, 11:15 PM IST

Updated : Jul 23, 2021, 12:13 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள மகாத் தலாய் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இதுவரை 300லிருந்து ர்00 பேர்வரை சிக்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நிதி சௌத்ரி கூறுகையில், “இதுவரை 300லிருந்து 400 பேர்வரை நிலச்சரிவில் சிக்கியிருக்கின்றனர். அதேபோல், 30 முதல் 35 வீடுகள் புதைந்துள்ளன.

கடும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினரால் சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை.அவர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் ” என்றார்.

Last Updated : Jul 23, 2021, 12:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details