”வாழ்தலின் மொத்த ரகசியமும் நாம் பயம் இல்லாமல் இருப்பதில் தான் அடங்கியுள்ளது” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், இன்று (ஜூன்.24) அவர் குஜராத் மாநிலம், சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் வரிசையில் நரேந்திர மோடி' என விமர்சித்துப் பேசினார்.