நாட்டின் தலைநகர் டெல்லியில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடிவருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு பொய்களைப் பரப்பி கொள்ளையடித்துவருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என அரசு தெரிவித்தது. ஆனால், அவர்களது நண்பர்களின் வருமானம்தான் நான்கு மடங்கு அதிகரித்தது. இதற்கு, நேர்மாறாக விவசாயிகளின் ஊதியம் பாதியாக குறைந்தது. சூட்டு பூட்டு போட்டுக்கொண்டு பொய்களைப் பரப்பி கொள்ளையடிக்கும் அரசு" எனப் பதிவிட்டுள்ளார்.