நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி சீனாவைக் கண்டு அஞ்சுகிறார் என விமர்சித்து காணொலி வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி காட்டமாக விமர்சித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ராகுல் காந்தியை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவை ஏதும் இல்லை. அவருக்கு வரலாறும் தெரியாது. எதிர்காலம் குறித்தும் தெரியாது.