உதய்பூர் (ராஜஸ்தான்):காங்கிரஸ் கட்சியின் சார்பாக உதய்பூரில் மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி உதய்பூர் வந்தடைந்தார். அவருக்கு அங்கு ராஜஸ்தான் கலாச்சார முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கியோல்ட் இருந்தார். மேலும் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் உடன் இருந்தனர்.
காங்கிரஸின் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம்(சிந்தன் சிவிர்) இன்று (மே 13) தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனை, பொருளாதாரம், அமைப்பு, இளைஞர்கள் மற்றும் சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூட்டத்தில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.