டெல்லி: பஞ்சாப்பில் நிலவும்உள்கட்சி அரசியல் குழப்பம் குறித்து இருவரும் பேசவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் காங்கிரஸில் உள்கட்சி பிரச்னை தலைதூக்கியுள்ளது. முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் மீது காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் அதிருப்தி தெரிவித்துவருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் சித்து, காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார்.