புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (மே.2) காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்துவருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பழகனைவிட 3,727 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.