தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக் கூடாது - புதுச்சேரி அரசு - புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை

புதுச்சேரி: பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

puducherry
puducherry

By

Published : Apr 24, 2021, 3:04 PM IST

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் மைக்கேல் பெனோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு தேர்வுத் துறை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, மே 5ஆம் தேதிமுதல் 31ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு கல்வி வாரியத்தின்கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாள்கள் குறித்த அறிவிப்பு, தமிழ்நாடு கல்வி வாரிய இயக்குநரால் தேர்வு நடைபெறும் 15 நாள்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும். பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்த வடிவம் அல்லது முறையிலும் வகுப்புகளை நடத்தக் கூடாது.

பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியர்களை எந்த நோக்கத்திற்காகவும் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தக் கூடாது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், பள்ளிகளில் வகுப்புகள், நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகள், படிப்பில் சுமாரான மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு, டியூசன் உள்ளிட்ட எந்தவித கல்வி நடவடிக்கைகளையும், எந்த வடிவத்தில் அல்லது முறையிலும் நடத்தக் கூடாது. மேற்கண்டவற்றை மிகவும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

இது தொடர்பான விதிமீறல் புகார்கள் தீவிரமாகப் பார்க்கப்படும். விதிமீறல்களுக்குக் குறிப்பிட்ட பள்ளியே முழுப் பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details