புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவர் அதே பகுதியில் சீட்டு கம்பெனி நடத்திவருகிறார். இவர் தன்னிடம் செலுத்தும் பணத்திற்கு இரட்டிப்பாகத் தொகை வழங்கப்படும் என வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ. 18 கோடி வரை பணம் பெற்றுள்ளார்.
பணம் கொடுத்த நபர்கள் அதனைத் திரும்பக் கேட்டபோது 2020 மார்ச் மாதம் தருவதாகத் தெரிவித்தார். பின்னர் கரோனா ஊரடங்கால் சீட்டு கம்பெனியை மூடினார். தொடர்ந்து அவர் தலைமறைவானார்.
இது குறித்து சஞ்சீவ் குமார் தம்பி பிரகாஷ் குமார் என்பரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் சீட்டு கம்பெனியை முற்றுகையிட்டனர்.