தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பேரவைக்குச் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் அம்பேத்கர்தான்' - Puducherry Minister Sai Saravanakumar

நாள்தோறும் எனது ஆசான் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து சட்டப்பேரவைக்குள் நுழைவதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.

சாய் சரவணக்குமார்
சாய் சரவணக்குமார்

By

Published : Aug 6, 2021, 11:51 AM IST

Updated : Aug 6, 2021, 1:17 PM IST

புதுச்சேரி: குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் இன்று ஈடிவி பாரத்துக்குப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நான் அமைச்சராகப் பொறுப்பேற்று என்னைச் சந்திக்க வருபவர்களின் குறைகளைக் கேட்டு தீர்த்துவைத்து வருகிறேன். சமீபத்தில் தொகுதி மக்கள் என்னைக் காண சட்டப்பேரவைக்கு வந்தனர்.

அச்சமயம் ஒருவர் நீங்கள் அமைச்சராக இருப்பதால் பேச தயக்கமாக உள்ளது என அக்கூட்டத்தில் பேசினார். அப்போது உங்களில் ஒருவனாக இருக்க நான் தரையில் அமர்ந்துகொள்கிறேன். நீங்கள் உங்கள் குறைகளை இப்போது தெரிவிக்கலாம் என்று கூறினேன். என்னை மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.

சட்டப்பேரவைக்குச் செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு மாமேதை அம்பேத்கர் காரணம்.

சட்டப்பேரவையில் எதிரே அமைந்துள்ள எனது ஆசான் அம்பேத்கர் சிலைக்கு நாள்தோறும் மாலை அணிவித்து பேரவைக்குள் நுழைகிறேன். எனது துறையின்கீழ் செயல்படும் சிறுபான்மையின மக்களுக்கு இணையதளம் தொடங்கி அதில் சிறுபான்மை மக்களுக்காகச் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் அதில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இதன்மூலம் இணையதளத்தில் அனைத்துத் திட்டங்களையும் சிறுபான்மையினர் தெரிந்துகொள்ள முடியும். பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடக்கும் ரேஷன் கடைகளைத் திறக்க முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுத்துவருகிறேன். இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது. இதனால் வேலை இழந்த பல ரேஷன் கடை ஊழியர்கள் பயன்பெறுவர்.

மேலும் பொதுமக்களுக்கு பாமாயில்,இலவச அரிசி உணவு தானியங்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எனது துறையான தீயணைப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுத்துவருகிறேன்.

எனது துறைகளிலும் நான் நேரில் சென்று ஆய்வு நடத்தி மக்கள் நலத் திட்ட பணிகள் விரைவில் நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போலி பத்திரம் மூலம் பல கோடி ரூபாய் சொத்துகள் அபகரிப்பு - நாராயணசாமி குற்றச்சாட்டு

Last Updated : Aug 6, 2021, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details