தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு

By

Published : Sep 15, 2021, 11:19 PM IST

புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று நள்ளிரவுடன் முடியும் நிலையில், 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

puducherry-curfew-extended-till-sep-30
புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி:தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,புதுச்சேரியில் அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதி. இதேபோல் மதுக்கடைகள் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், மது அருந்தும் வசதியுடன் கூடிய உணவகங்கள் இரவு 11 மணிவரை செயல்பட அனுமதி. கடற்கரை சாலை காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை திறந்திருக்கும்.

அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், கூடுதல் தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details