தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு கரோனா

By

Published : Jul 31, 2021, 1:03 PM IST

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி
புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 பேருக்கும், காரைக்காலில் 20 பேருக்கும், மாஹேவில் 12 பேருக்கும்,ஏனாமில் ஒருவருக்கும் என மொத்தம் 100 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைப் பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 1,795ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலத்தில் 962 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,18,158 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,20,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:42 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details